சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான படை தலைவன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஜகநாதன் பரமசிவம் தயாரித்துள்ள இந்தப் படத்தை யு. அன்பு எழுதி இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.
இதில் கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யானைக்கும் மனிதனுக்கும் இடையேயான பாசப் போராட்டமாக இப்படம் உருவாகியுள்ளது.
அதிரடி ஆக்சன் நிறைந்த காட்சிகளால் நிறைந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் கவனம் பெற்றது. தொடர்ந்து, இப்படம் மே 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்த நிலையில், இப்படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம், தமிழகமெங்கும் 500 திரையரங்கில் வெளியிடுகிறது.
இதையும் படிக்க: சர்தார் - 2 படப்பிடிப்பு நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.