12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஏகே - 64 இயக்குநர் இவர்தானாம்!

அஜித்தின் 64-வது பட இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது...

actor ajith kumar next film

நடிகர் அஜித் குமார்

Published On :

நடிகர் அஜித் குமார் நடிக்கும் அவரது 64-வது பட இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விடாமுயற்சியின் தோல்வியைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் மறுமுறை பார்ப்பதற்கான ஆவலையும் ஏற்படுத்தியதால் இப்படம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.

அதேநேரம், இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் எதுவுமின்றி அஜித் அடுத்த கார் பந்தயத்துக்கு பயிற்சி எடுத்து வருகிறார்.

இதற்கிடையே, அஜித்தின் 64-வது படத்தை யார் இயக்குவார் என்கிற கேள்விகளும் வட்டமடித்து வருகின்றன. இதற்கான பட்டியலில் இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு, ஷங்கர், பிரசாந்த் நீல், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரின் பெயர்கள் இருந்தன.

குட் பேட் அக்லி படப்பிடிப்பில் அஜித்துடன் ஆதிக் ரவிச்சந்திரன்.

குட் பேட் அக்லி படப்பிடிப்பில் அஜித்துடன் ஆதிக் ரவிச்சந்திரன்.

இந்த நிலையில், ஏகே - 64 படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளதாம். குட் பேட் அக்லி படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.