பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஏகே - 64?

அஜித்தின் 64-வது படத்தின் பட்ஜெட் குறித்து...

News image
Updated On :16 ஜூன் 2025, 9:59 pm IST

நடிகர் அஜித்தின் 64-வது படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் குமார் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தற்போதைய தகவல்படி, ஏகே - 64 படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளதாம். வேல்ஸ் இண்டர்னேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், இப்படத்தை குட் பேட் அக்லி போல் ரசிகர்களைக் கவரும் விதமாக எடுக்க இயக்குநர் ஆதிக் திட்டமிட்டுள்ளதாகவும் படத்தின் பட்ஜெட் ரூ. 250 கோடிக்கும் மேல் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் படப்பிடிப்பை வெளிநாடுகளில் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதே பட்ஜெட் அதிகரிப்பிற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.