
சூர்யா - 49 திரைப்படத்தை இயக்கும் எச். வினோத்... நாயகி இவரா?
சூர்யா - 49 திரைப்படம் குறித்து...

இயக்குநர் ஹெச். வினோத், நடிகர் சூர்யா
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சூர்யா நடிப்பில் திரைக்கு வந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்திற்குக் கிடைத்த நல்ல விமர்சனங்களால் தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஜாலியான கமர்சியல் குடும்பத் திரைப்படமாகவும் அதே நேரம் உணர்வுப்பூர்வமாக இதன் கதை எழுதப்பட்டிருந்ததால், இப்படம் இதுவரை உலக அளவில் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம் சூர்யா நடிப்பில் திரைக்கு வந்த கருப்பு திரைப்படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று ரூ. 340 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.
இதனால், சில ஆண்டுகளாக திரையரங்கில் பெரிய ஹிட் இல்லாமல் இருந்த சூர்யா, ஒரே ஆண்டில் அடுத்தடுத்து இரண்டு ரூ. 250 கோடிக்கும் அதிகமான வசூல் திரைப்படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் வலுவான மார்க்கெட் உள்ள நடிகராகியுள்ளார்.
இந்த தீபாவளிக்கு சூர்யாவின் 47-வது திரைப்படம் வெளியாகி அதுவும் வெற்றியைப் பெற்றால் சூர்யா ஹாட்ரிக் வெற்றியைப் பெறுவார்.
அடுத்ததாக, சூர்யாவின் 48வது திரைப்படத்தை இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இதில், மருத்துவராக சூர்யா நடிக்கிறார். இந்த நிலையில், சூர்யா - 49 திரைப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கவுள்ளதாகவும் நாயகியாக நடிகை வாமிகா கபி ஒப்பந்தம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜன நாயகனுக்குப் பின் வினோத் இயக்கும் படமென்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும், டிசி திரைப்படத்தில் அசத்திய வாமிகா கபி நடிகர் சூர்யாவுடன் இணைய உள்ளது ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
Reports indicate that actor Suriya is set to star in a film directed by H. Vinoth.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






