மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!ரஷியா, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்புபுகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத கைப்பேசிக்கு தடையில்லை: அமைச்சர்சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வுதமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு!

அரிசி மூட்டை சைஸ்ல... கார்த்தியைப் பாராட்டிய சூர்யா!

நடிகர் கார்த்தி குறித்து பேசிய நடிகர் சூர்யா....

நடிகர்கள் சூர்யா, கார்த்தி

Published On :1 செப்டம்பர் 2026, 12:30 pm IST

நடிகர் சூர்யா அவரது சகோதரரான நடிகர் கார்த்தியைப் பாராட்டியுள்ளார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் - 2 திரைப்படம் வருகிற செப். 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. வில்லனாக எஸ்ஜே சூர்யா, முக்கிய கதாபாத்திரங்களில் நடிகைகள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் கலந்த உளவுக்கதையாக இப்படம் உருவாகியுள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சர்தார் முதல் பாகம் நல்ல வெற்றியைப் பெற்றதால், இரண்டாம் பாகம் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா, “எனக்கும் கார்த்திக்கும் இடையே போட்டியோ பொறாமையோ இருந்ததில்லை. அவன் வழி தனி வழி. என்னைச் சந்திக்கும் நிறைய பேர், ‘சார், நான் உங்க தம்பி கார்த்தியோட பெரிய ரசிகன். அவர்கிட்ட சொல்லிடுங்க’ என்பார்கள். என்னைக் குறித்து கூட அதிகம் கேட்க மாட்டார்கள். என்னைவிட கார்த்தி சினிமாவை ஆழமாக யோசிக்கக்கூடிய ஆள்.

இந்த அர்பணிப்பைப் பார்த்து வாயைப் பிளந்தது பருத்திவீரனில்தான். என் பக்கத்துலதானே இருந்த? என அப்போது வியந்தேன். கார்த்தி அமெரிக்காவிலிருந்து வந்த காலங்களில் அரிசி மூட்டை அளவில் சிப்ஸ் பாக்கெட்டை வாங்கி வந்து சோபாவில் தன் அருகே வைத்து உண்பார். அப்படியிருந்த ஆள், பருத்திவீரனுக்காகத் தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு, உருண்டு பிறண்டு... பாடி.. ஆடி.. சண்டை போட்டு எனக் கடுமையான உழைப்பைக் கொட்டி அந்த வாய்ப்பை விடாமல் பார்த்துக்கொண்டார். ஒரு நடிகனாக எவ்வளவு உண்மையாக இருக்க முடியுமோ அதைச் செய்யக்கூடியவர் கார்த்தி.” எனப் பாராட்டியுள்ளார்.

Actor Suriya has praised his brother, actor Karthi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.