தமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

வெற்றிக்கான ரகசியம் என்ன? சிறகடிக்க ஆசை நாயகியின் பதிவு

வெற்றிக்கான ரகசியம் குறித்து சிறகடிக்க ஆசை தொடரின் நாயகி கோமதி பிரியா கருத்து தெரிவித்துள்ளார்..

கோமதி பிரியா - இன்ஸ்டாகிராம்

Published On :17 ஜூன் 2025, 5:43 pm IST

வெற்றிக்கான ரகசியம் குறித்து சிறகடிக்க ஆசை தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை கோமதி பிரியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடித்துவருவதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை கோமதி பிரியா.

கேரளத்தைச் சேர்ந்த இவர், மலையாளத் தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் செம்பன்னீர் பூவு என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

தமிழில் சிறகடிக்க ஆசை தொடரில் நடித்து வருவதால், தமிழ்நாட்டிற்கும் கேரளத்துக்கும் பயணித்துவரும் பிஸியான நடிகையாக உள்ளார்.

கோமதி பிரியா

கோமதி பிரியா - இன்ஸ்டாகிராம்

இதனிடையே ஓய்வு நேரம் கிடைக்கும்போதெல்லாம், அடிக்கடி பயணங்கள் செல்வதையும் கோயிலுக்குச் செல்வதையும் வாடிக்கையாகக் கொண்டவர். சமீபத்தில் கோயிலுக்குச் சென்றுள்ள கோமதி, அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

கோயிலில் கோமதி பிரியா

கோயிலில் கோமதி பிரியா - இன்ஸ்டாகிராம்

இதனுடன் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுப்பதற்காக, சிலநேரங்களில் உங்களுக்குத் தெரியாத பயணத்தில் கடவுள் உங்களை அழைத்துச் செல்வார். அதனால், திட்டங்களை நம்புங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

வெற்றிக்கான ரசிகசியமாக இதனை எடுத்துக்கொள்ளலாம் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.