உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

விமான நிலையத்திலிருந்து ஒன்றாகச் சென்ற ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா!

நடிகை ரஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் ஒன்றாக காரில் பயணித்தது குறித்து...

Vijay Devarakonda, Rashmika Mandhana in same car

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா. - படங்கள்: எக்ஸ்

Published On :

நடிகை ரஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் ஒன்றாக காரில் பயணித்த புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ரஷ்மிகா மந்தனாவுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, டியர் காம்ரெட் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தனர்.

இருவரும் ஒன்றாக வெளிநாட்டுக்குப் பயணம் செய்வது என இருந்தாலும் இதுவரை யாரும் இது குறித்து அதிகாரபூர்வமாக ஆம் எனவும் மறுப்பு எனவும் கருத்துக் கூறியதில்லை.

அல்லு அர்ஜூன், கார்த்தி, விஜய், ரன்பீர் கப்பூர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பான் இந்தியா படங்களில் ராஷ்மிகா நடித்து பிரபலமானார்.

கடந்தாண்டு புஷ்பா 2 புரமோஷன் நிகழ்ச்சியில் ராஷ்மிகா, “என் காதல் எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தானே... இந்தப் பதிலுக்காகத்தான் கேட்டீர்கள் எனத் தெரியும்” என்றார்.

இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் இருவரும் ஒன்றாக காரில் புறப்பட்டுச் சென்றார்கள். இருவருமே மாஸ்க் அணிந்து இருந்தார்கள். இருப்பினும் இருவருது முகவும் தெளிவாகத் தெரிகின்றன.

விரைவில், திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.