நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

ரசிகரை அடித்த பிரபல நடிகை!

ரசிகரை அறைந்த நடிகை...

News image
Updated On :11 மார்ச் 2025, 11:57 am IST

பிரபல நடிகையொருவர் ரசிகர் கன்னத்தில் அறைந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ராகிணி திவேதி. அறிமுகமான ஆண்டில் சில படங்களில் தொடர்ச்சியாக நடித்து கவனம் ஈர்த்தவர் தமிழில் அறியான், நிமிர்ந்து நில், கிக் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தென்னிந்திய மொழிகளில் அறியப்பட்ட நாயகியாகவே இருக்கிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பெங்களூருவிலுள்ள ராகிணியின் இல்லத்தை சோதனை செய்தபோது அவர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பிலிருந்ததும் போதைப்பொருளைப் பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ராகிணி 140 நாள்கள் வரை சிறையிலிருந்து பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், பெங்களூருவில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராகிணி திவேதியிடம் புகைப்படம் எடுக்கவும் ஆட்டோகிராஃப் வாங்கவும் ரசிகர்கள் கூட்டமாக அவரைச் சூழ்ந்தனர்.

 ராகிணி திவேதி

ராகிணி திவேதி

அப்போது, எதிர்பாராத விதமாக ரசிகர் ஒருவர் ராகிணியின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். இதனால், கோபமடைந்த ராகிணி அந்த ரசிகரின் கன்னத்தில் பளார் என அறைந்தார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.