நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விரைவில் முடிகிறது ரோஜா -2 தொடர்!

ரோஜா 2 தொடர் முடியவுள்ள தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News image

ரோஜா 2 தொடர் - இன்ஸ்டாகிராம்

Updated On :12 மார்ச் 2025, 3:38 pm IST

மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ரோஜா 2 தொடர் விரைவில் முடியவுள்ளது. தொடர் முடியவுள்ள தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோஜா முதல் பாகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலையில், இரண்டாம் பாகம் நேரடியாக யூடியூப் தளத்திலேயே ஒளிபரப்பாகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ரோஜா -2 ஒளிபரப்பாகிவருகிறது.

தனது வசீகரமான தோற்றத்தாலும் நடிப்பாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்த பிரியங்கா நல்காரியே ரோஜா -2 தொடரிலும் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நியாஸ்கான் நடித்து வருகிறார். இவர் மூன்று முடிச்சு தொடரிலும் நாயகனாக நடித்து வருகிறார்.

Story image

இத்தொடர் சரிகம யூடியூப் சேனலில் ஜன. 6 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது.

சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்த சுந்தரி தொடரில் கார்த்திக் பாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த ஜிஷ்ணு மேனனும் ரோஜா -2 தொடரில் நடித்து வருகிறார்.

இளமை துள்ளலுடன் காதல், பாசம் என பல உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும் இத்தொடர் விரைவில் முடியவுள்ளது. யூடியூப் தளத்தில் ஒளிபரப்பானதால் மிகவும் குறுகிய காலத்தில் ரோஜா -2 தொடர் முடியவுள்ளதாக ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.