சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இதயம் தொடரிலிருந்து விலகும் ஜனனி! காரணம் பகிர்ந்து உருக்கம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இதயம் தொடரில் இருந்து நடிகை ஜனனி விலகுவதாக அறிவித்துள்ளார்.

News image
ஜனனி அசோக்குமார் - இன்ஸ்டாகிராம்
Updated On :17 மார்ச் 2025, 10:09 am

DIN

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இதயம் தொடரில் இருந்து நடிகை ஜனனி விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இதயம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

காதல், மகளின் மீதான பெற்றோரின் பாசம், குடும்ப சிக்கல் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு வரும் இத்தொடர், மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில், அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெறும் தொடராக இதயம் உள்ளது. இத்தொடரில் ஜனனி அசோக் குமார் நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக நடிகர் ரிச்சர்ட் ஜோஷ் நடிக்கிறார்.

இதயம் தொடர்

இதயம் தொடர்

ஆகஸ்ட் 2023ல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடர் 650 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகிவருகிறது. இத்தொடர் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், இதன் இரண்டாம் பாகமும் எடுக்கப்படவுள்ளது.

இதனிடையே இதயம் தொடரில் இருந்து விலகுவதாக நடிகை ஜனனி அசோக் குமார் அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளதாவது,

''இது, இதயம் தொடரில் பாரதி பாத்திரத்துக்கான பிரியாவிடை. என் இதயம் அன்பாலும் நன்றியாலும் வார்த்தையால் கூற முடியாத உணர்வுகளாலும் நிறைந்திருக்கிறது. பாரதி என்ற பாத்திரத்தில் நடித்தது மிகவும் பெருமை மிகுந்த தருணம். என்னை பாரதியாக ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் மிகுந்த நன்றி.

ஓய்வற்ற உழைப்பு, புதுமை மற்றும் வேலையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட படக்குழுவுடனும் சக நடிகர்களுடனும் இப்பயணத்தில் இருந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.

அற்புதமான ரசிகர்களே, உங்கள் அன்பும் ஆதரவும் இந்த உலகில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. உங்கள் உற்சாகம், ஊக்குவிப்பு போன்றவை என்னை தொடர்ந்து பயணிக்கவைக்கிறது. இத்தொடரின் மூலம் உங்களை மகிழ்வித்ததிலும் உங்களில் ஒருத்தியாக வாழ்ந்ததிலும் மகிழ்கிறேன்.

ஜனனி அசோக்குமார்

ஜனனி அசோக்குமார்

இந்த அத்தியாயத்தை இத்துடன் முடிக்கிறேன். அடுத்தடுத்த அதிரடி மாற்றங்களுக்காக காத்திருக்கிறேன். இந்த அற்புதமான பயணத்தில் உடன் இருந்தவர்களுக்கு மிகுந்த நன்றி. அடுத்த திரையில் உங்களை சந்திக்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்தப் பதிவால், சின்ன திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு நடிக்கச் சென்றுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.