திமுகவில் 77-லிருந்து 110 மாவட்டங்களாக அதிகரிப்பு! சென்னையில் 10 மாவட்டங்கள்!திபெத்தில் அணை உடைந்தது! நேபாளத்துக்கு புதிய எச்சரிக்கை! மீட்புப் பணிகள் நிறுத்தம்!தேர்தல் வழக்குகள்! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனா மனுக்களுக்கு பதிலளிக்க திமுக வேட்பாளர்களுக்கு உத்தரவு!நேபாள வெள்ளம்! பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது! மீட்புப் பணிகள் தீவிரம்!உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்

மே. 1-ல் வெளியான அனைத்து படங்களும் ஹிட்!

புதிய படங்களின் வணிக வெற்றி குறித்து....

Published On :8 மே 2025, 11:51 am IST

மே. 1 ஆம் தேதி திரைக்கு வந்த முக்கியமான படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன.

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ, சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, நானியின் ஹிட் - 3, அஜய் தேவ்கன் நடித்த ரெய்டு - 2 ஆகிய திரைப்படங்கள் மே. 1 ஆம் தேதி வெளியாகின.

இதில், ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ. 110 கோடிக்கு அதிகமாகவும் நானியின் ஹிட் - 3 ரூ. 120 கோடி வரையிலும் வசூலித்துள்ளன.

பாலிவுட்டில் எதிர்பார்க்கப்பட்ட ரெய்டு - 2 திரைப்படமும் ரூ. 90 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமாகியுள்ளது.

இப்படங்களை விட கதை ரீதியாகவும் வரவேற்பு ரீதியாகவும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ரூ. 8 கோடியில் உருவான இப்படம் இதுவரை ரூ. 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த வாரமும் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

அதிசயமாக, ஒரே நாளில் வெளியான அனைத்து படங்களும் ஹிட் அடித்திருப்பது திரைத்துறையைச் சேர்ந்தவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.