எழுத்தாளர் பூமணி காலமானார் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கங்கனா ரணாவத்..! குவியும் வாழ்த்துகள்!

நடிகை கங்கனா ரணாவத் ஹாலிவுட் படத்தில் முதல்முறையாக நடிக்கவிருக்கிறார்.

News image

கங்கனா ரணாவத் - படம்: எக்ஸ் / கங்கனா ரணாவத்

Updated On :9 மே 2025, 5:26 pm IST

நடிகை கங்கனா ரணாவத் ஹாலிவுட் படத்தில் முதல்முறையாக நடிக்கவிருக்கிறார்.

நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் இயக்கத்தில் சமீபத்தில் எமர்ஜென்சி என்ற திரைப்படம் வெளியானது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்கியிருந்தார். சீக்கியர்கள் பிரச்னைகளுக்குப் பிறகு இந்தப் படம் தாமதமாக ரிலீஸானது.

4 தேசிய விருதுகளை வென்றுள்ள கங்கனா ரணாவத் தற்போது முதல்முறையாக ’பிளெஸ்ட் பி த எவில்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தினை அனுராக் ருத்ரா இயக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு கதா திவாரி திரைக்கதை எழுதியுள்ளார். இவர்கள் இருவருமே படத்தினையும் தயாரித்துள்ளார்கள்.

இந்தப் படம் ஹாரர் வகையில் எடுக்கப்படுமென தயாரிப்பு நிருவனம் கூறியதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தப் படத்தின் படப்பிடிப்பினை அமெரிக்காவில் நடத்தவிருப்பதாக படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கரு கலைந்தபிறகு கைவிடப்பட்ட ஒரு பண்ணையை வாங்கிய கிறிஸ்தவ தம்பதியினரைப் பின் தொடர்ந்து நடக்கும் கதையாக இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.