25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

கமல்ஹாசன் தயாரிப்பில் மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - சுந்தர் சி கூட்டணி!

கமல்ஹாசன் தயாரிக்கும் நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படம் குறித்து...

ரஜினிகாந்த் - கமல்ஹாசன் - படம் - எக்ஸ்

Published On :5 நவம்பர் 2025, 8:05 pm IST

கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் நடிக்கவுள்ளார். இது, ரஜினியின் 173 ஆவது படம்.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன்; அன்புடைய ரஜினி எனவும், நாம் பிறந்த கலைமண் வாழ்க எனவும் குறிப்பிட்டு கவிதையொன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய படம் வரும் 2027 ஆம் ஆண்டின் பொங்கல் அன்று வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, நடிகர்கள் கமல் மற்றும் ரஜினி இணைந்து திரைப்படம் நடிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியான நிலையில் அப்படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்வி இணையத்தில் அதிக கவனங்களை ஈர்த்து வந்தது.

முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் சுந்தர் சி ஆகியோரின் கூட்டணியில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான அருணாச்சலம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been announced that actor Rajinikanth's 173rd film will be produced by Kamal Haasan and directed by Sundar C.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.