உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இந்திய சர்வதேச திரைப்பட விழா: தங்க மயில் விருதுக்கான போட்டியில் அமரன்!

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்க மயில் விருதுக்கு அமரன் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது...

Published On :

56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தங்க மயில் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோவாவில், 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் நவ.20 முதல் நவ.28 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த சுமார் 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த நிலையில், விழாவில் நடைபெறும் சர்வதேச போட்டியின் கீழ் தங்க மயில் விருதுக்கு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்த ‘அமரன்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவின் கீழ் தொடக்க திரைப்படமாக அமரன் திரையிடப்படுகின்றது.

முன்னதாக, நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம், மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Actor Sivakarthikeyan's film 'Amaran' has been nominated for the Golden Peacock Award at the 56th International Film Festival of India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.