நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பணமோசடி புகார்: பிக் பாஸ் பிரபலம் கைது!

பணமோசடி புகாரில் நடிகர் தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

நடிகர் தினேஷ்.

Updated On :13 நவம்பர் 2025, 4:18 pm IST

பணமோசடி புகாரில் சின்ன திரை நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருணாநிதி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சின்ன திரை நடிகர் தினேஷை பணகுடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 2022ல் அரசு வேலை வாங்கித் தருவதாக நடிகர் தினேஷ் ரூ. 3 லட்சம் பெற்றதாகவும், அதனைத் திருப்பி கேட்டபோது, அவர் தராமல் அலைக்கழித்தாகவும் கருணாநிதி என்பவர் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் நடிகர் தினேஷை பணகுடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பணமோசடி புகார் தொடர்பாக தினேஷ் மீது, வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் தினேஷ். பிக் பாஸ் 7வது சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பணமோசடி விவகாரத்தில் நடிகர் தினேஷ் கைதான தகவல் சின்ன திரை ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: பாட்டியாக நடித்த ரோஜா!

Summary

Small screen actor and Bigg Boss celebrity Dinesh has been arrested on a money laundering complaint.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.