திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

முதல்முறை! தீபாவளி வெளியீட்டில் ஆங்கில பெயர்கள்!

தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் படங்களின் பெயர்கள் குறித்து...

News image

ஹரிஷ் கல்யாண், பிரதீப் ரங்கநாதன், டியூட்

Updated On :15 அக்டோபர் 2025, 12:36 pm IST

தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் தமிழ்ப்படங்களுக்கு ஆங்கில பெயர்களே வைக்கப்பட்டிருக்கின்றன.

தீபாவளி வெளியீடாக பல ஆண்டுகளாக நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பிரபலங்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளன.

ஆனால், இந்தாண்டு ஆச்சரியமாக எந்த பெரிய நாயகர்களின் திரைப்படமும் தீபாவளி வெளியீட்டில் இல்லை. முதல் முறையாக இளம் கதாநாயகர்களின் படங்களே திரைக்கு வருகின்றன.

அதிலும், ஆச்சரியமாக ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ் விக்ரமின் பைசன் ஆகிய திரைப்படங்களுக்கு ஆங்கிலத்திலேயே பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. முதல்முறையாகத் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் இந்த 3 படங்களுக்கும் ஆங்கில பெயர்கள்தான்.

சில ஆண்டுகளுக்கு முன் வரை தமிழ் பெயர் கொண்ட நல்ல கதையம்சமுள்ள படங்களுக்கு வரி விலக்குகள் கிடைத்தன. ஆனால், இப்போது அந்த விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இளம் தலைமுறையினரை ஈர்க்கவும் பான் இந்தியளவில் கவனிக்கவும் ஆங்கில பெயர்களே வசதியாக இருப்பதால் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன!

Summary

diwali release tamil movies title names in english

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.