நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பழம்பெரும் பாடகி பாலசரஸ்வதி தேவி காலமானார்

பழம்பெரும் பாடகி பாலசரஸ்வதி தேவி காலமானார்...

News image

பழம்பெரும் பாடகி பாலசரஸ்வதி தேவி - படம் - எக்ஸ்

Updated On :15 அக்டோபர் 2025, 6:50 pm IST

பழம்பெரும் பாடகி பாலசரஸ்வதி தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (அக். 15) காலமானார்.

பழம்பெரும் பாடகி மற்றும் நடிகையான பாலசரஸ்வதி தேவி (வயது 97), வயது மூப்பினால் கடந்த 2 - 3 நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர், தெலுங்கு திரையுலகின் முதல் பின்னணி பாடகி எனக் கூறப்படுகிறது. “சதி அனுசுயா” எனும் திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமான பாலசரஸ்வதி தேவி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 2,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்த நிலையில், பாடகி பாலசரஸ்வதி தேவியின் மறைவுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான பாலசரஸ்வதி தேவி, ஆல் இந்தியா ரேடியோவில் ஏராளாமான பாடல்களை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Veteran singer Balasaraswathy Devi passed away today (Oct. 15) due to old age.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.