ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

ஹான்ஸ் ஜிம்மருடன் இணையும் மற்றொரு இந்திய இசையமைப்பாளர்!

பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இந்திய இசையமைப்பாளர் சஷ்வத் சச்தேவ் இணைந்து பணியாற்றுவது குறித்து...

சஷ்வத் சச்தேவ் - ஹான்ஸ் ஜிம்மர் (கோப்புப் படம்) - படம் - ANI

Published On :23 அக்டோபர் 2025, 10:10 pm IST

பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து பாலிவுட் இசையமைப்பாளர் சஷ்வத் சச்தேவ் பணியாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சஷ்வத் சச்தேவ், ‘உரி: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’, ‘கில்’ ஆகிய வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை வென்ற பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ‘விர்டீ’ எனும் தொலைக்காட்சித் தொடருக்கு சஷ்வத் சச்தேவ் இசையமைக்கின்றார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்டங்களைக் கடந்து இசையமைப்பதில் மிகவும் மகிழ்ச்சி எனவும், மும்பையிலிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் வந்தாலும் அதே இதய துடிப்புதான் எனவும்; நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

முன்னதாக, இயக்குநர் நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி ஆகியோரது நடிப்பில் உருவாகும், ராமாயணா படத்துக்கு இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Bollywood music composer Sashwat Sachdev is reportedly working with famous Hollywood composer Hans Zimmer.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.