தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

17 வயது சிறுவனின் காதல் கோரிக்கைக்கு சீரியல் நடிகை அளித்த பதில்!

நடிகை அவந்திகா மோகனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற சிறுவனின் கோரிக்கையும் அதற்கு நடிகை அளித்த பதிலும் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

News image

அவந்திகா மோகன் - படம் - இன்ஸ்டாகிராம்

Updated On :9 செப்டம்பர் 2025, 4:04 pm IST

நடிகை அவந்திகா மோகனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற சிறுவனின் கோரிக்கையும் அதற்கு நடிகை அளித்த பதிலும் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காதலிப்பதாகக் கூறி திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் கேள்வி கேட்டுவந்த 17 வயது சிறுவனுக்கு நடிகை அவந்திகா மோகன் பதில் அளித்துள்ளார்.

உலகம் என்னவென்று புரியத்தொடங்கியிருக்கும் இந்த வயதில், தேர்வில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், நாம் திருமணம் செய்துகொண்டால், கணவன் - மனைவி என்று அழைக்கமாட்டார்கள்; என்னை உன் அம்மா என்றே அழைப்பார்கள் என அச்சிறுவனுக்கு பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவந்திகா பதிவிட்டுள்ளதாவது,

''என் சிறுவயது ரசிகனுக்கு. நீ என்னை விட வயதில் சிறியவன். நீயும் சில நாட்களாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகிறாய். நேர்மையாக உன்னிடம் ஒன்று சொல்கிறேன். 16 அல்லது 17 வயது சிறுவன் நீ.

வாழ்க்கை என்னவென இப்போது தான் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கும். நீ, என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஓராண்டுக்கும் மேலாக மெசேஜ் அனுப்பி வருகிறாய்.

திருமணத்தைப் பற்றியல்ல; நீ தேர்வுகளைப் பற்றி கவலைப்பட வேண்டிய வயது இது. நாம் திருமணம் செய்துகொண்டால், நாம் திருமணம் செய்துகொண்டால், கணவன் - மனைவி என்று அழைக்கமாட்டார்கள்; என்னை உன் அம்மா என்றே அழைப்பார்கள்.

நடிகை அவந்திகாவின் பதிவு

நடிகை அவந்திகாவின் பதிவு

எனவே, நீ படிப்பில் கவனம் செலுத்து. சரியான நேரத்தில் காதல் உன்னை தேடிவரும். சரியான நேரத்தில் உன் காதல் கதை உனக்கு உனக்காக உருவாகும். அன்பும் ஆசிர்வாதங்களும்'' எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

அவந்திகா

அவந்திகா - இன்ஸ்டாகிராம்

மலையாளத்தில் 2015 முதல் சின்ன திரை தொடர்களில் நடிகை அவந்திகா மோகன் நடித்து வருகிறார். முன்னதாக யக்ஷி ஃபெய்த்ஃபுல்லி யுவர்ஸ்' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து குரொக்கடைல் லவ் ஸ்டோரி மற்றும் துல்கர் சல்மானுடன் ஒரு படம் என 5 படங்கள் வரை நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் இரு படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்ன திரை தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Summary

Avantika Mohan responds to teens marriage proposal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.