ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

கணவரை அறிமுகப்படுத்தினார் கிரேஸ் ஆண்டனி..! யார் இந்த அபி டாம் சிரியாக்?

நடிகை கிரேஸ் ஆண்டனியின் கணவர் குறித்து...

News image

கணவர் உடன் கிரேஸ் ஆண்டனி. - படம்: இன்ஸ்டா / கிரேஸ் ஆண்டனி

Updated On :9 செப்டம்பர் 2025, 9:15 pm IST

பிரபல மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி தனது கணவரின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

தொடக்கத்தில் கணவரைக் குறிப்பிடாமல் பதிவிட்ட கிரேஸ் ஆண்டனி தற்போது கணவரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

கேரளத்தைச் சேர்ந்த கிரேஸ் ஆண்டனி (28 வயது) மலையாளத்தில் ஹேப்பி வெட்டிங் எனும் படத்தில் அறிமுகமானார்.

கிரேஸ் ஆண்டனியின் காதல் திருமணம்

ஃபகத் ஃபாசில் மனைவியாக கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். கடைசியாக இவர் பறந்து போ எனும் தமிழ்ப் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

இன்று (செப்.9) மாலை பெரிய கூட்டமில்லாமல் திருமணம் நடந்தததாக தனது இன்ஸ்டாவில் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

காதலித்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்துள்ளதாக கிரேஸ் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

யார் இந்த அபி டாம் சிரியாக்?

தொடக்கத்தில் கணவரைக் குறிப்பிடாமல் பதிவிட்ட கிரேஸ் ஆண்டனி தற்போது கணவர் அபி டாம் சிரியாக்கை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

கேரளத்தைச் சேர்ந்த அபி டாம் சிரியாக் (36 வயது) இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது முதல் படமே தொழில்நுட்பக் கோளாறால் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் பிருத்விராஜின் பாவாட எனும் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

கடைசியாக பத்மலோசனந்தே பவிழ மல்லிகா படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Summary

Popular Malayalam actress Grace Antony has posted photos of her husband.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.