விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ஆச்சரியப்படுத்தும் லோகா வசூல்!

லோகா வசூல் அறிவிப்பு...

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 3:30 pm IST

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா சேப்டர் - 1 சந்திரா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ், ஹந்தி ரசிகர்களிடமும் அசத்தலான வரவேற்பைப் பெற்றதால் பல திரைகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கல்யாணி பிரியதர்ஷனை மையக் கதாபாத்திரமாக வைத்து உருவான இப்படம் வெளியான ஓரே வாரத்திற்குள் ரூ. 100 கோடியை வசூலித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், தற்போது லோகா ரூ. 200 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் வெளியான 10 நாள்களில் இந்த சாதனையைச் செய்துள்ளதால் இந்தியளவில் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முக்கியமாக, மோகன்லாலின் எம்புரான் படத்தைத் தொடர்ந்து அதிவேகமாக ரூ.200 கோடி வசூலித்த மலையாளப் படமும் இதுதான்.

Story image

மேலும், லோகா கதைக்களத்துடன் தொடர்புடைய 4 பாகங்கள் உருவாகவுள்ளதால் இப்படத் தொடர் வணிக ரீதியாக பல சாதனைகளைச் செய்யலாம் என கருதப்படுகிறது.

Summary

actor kalyani priyadharshan's lokah movie crossed rs.200 crores

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.