வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

ஜனநாயகனுடன் மோதும் பராசக்தி!

நடிகர் சிவகார்த்திகேயனின் “பராசக்தி” திரைப்படத்தின் வெளியீடு குறித்து...

News image
Updated On :12 செப்டம்பர் 2025, 7:14 pm IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “பராசக்தி”. நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.

மொழிப்போர் காலங்களில் பழைய மெட்ராஸ் நகரத்தில் நடைபெறும் கதைகளத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை வெளியிடும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் பராசக்தி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டின் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக, வரும் 2026 ஜனவரி 9 ஆம் தேதி, நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் எனக் கூறப்படும் “ஜனநாயகன்” திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வெறும் நான்கு நாள்கள் இடைவெளியில் பராசக்தி வெளியாவது, இருபடங்களுக்கு இடையில் கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

It has been announced that the film Parasakthi, starring actor Sivakarthikeyan, will be released in theaters on the occasion of the Pongal festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.