பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

முதல்வர் படத்தில் பார்த்திபன்!

நடிகர் பார்த்திபனின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது.

Published On :

நடிகர் பார்த்திபனின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். நான் தான் சிஎம் என்ற படத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார்.

படத்தின் அறிவிப்பு குறித்த பதிவில்,

பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தபிறகு போடப் போகும் முதல் கையெழுத்து, எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் சிங்காரவேலன் என்கிற பெயரில், சோத்துக் கட்சி என்ற கட்சியில் படகு சின்னத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.

படத்தின் தலைப்பு அறிவிப்புக்கு முன்னதாகவே, அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப் போவதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.

Summary

Parthiban's New Movie poster goes viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.