நடிகர் ஆர்யா தன் 40-வது திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான கேப்டன், காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றன.
தற்போது, பா. இரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஏப். 17 ஆம் தேதி மிஸ்டர். எக்ஸ் வெளியாகிறது.
அடுத்ததாக இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் தன் 40-வது திரைப்படத்திற்காக ஆர்யா தயாராகி வருகிறார். இதில், நாயகிகளாக நடிகைகள் நிகிலா விமலும் வைஷ்ணவி சைதன்யாவும் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஆர்யா, “நான் தயாரிக்கும் என்னுடைய 40-வது திரைப்படம் ராஜா - ராணி படம் போல் நகைச்சுவையுடன் கூடிய உணர்வுப்பூர்வமான படமாக உருவாகவுள்ளது. இதில், நீண்ட காலம் கழித்து இரண்டு நாயகிகளுடன் இன்றைய தலைமுறைக்கான காதல் படத்தில் நடிக்கிறேன். எனக்கு சரியான நாயகிகள் அமைவதில்லை என்பதால் இப்படத்தில் சண்டையிட்டு 2 நாயகிகளுடன் மட்டுமே பேசுவது போல் நடித்துக்கொண்டிருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆர்யா இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா - 2 படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.
Summary
Actor Arya has spoken about his 40th film.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சார்பட்டா - 2 படப்பிடிப்பு அப்டேட்!
மிஸ்டர். எக்ஸ் வெளியீட்டுத் தேதி!

ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்: அக்ஷய் குமார்
அப்போதெல்லாம் கண்ணீர் விட்டிருக்கிறேன்: ஸ்ரீலீலா
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

