சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

வீடே கொண்டாட்டமாக இருக்கிறது: ஜோதிகா

கருப்பு மகிழ்ச்சியைப் பகிர்ந்த ஜோதிகா....

News image

சூர்யா, ஜோதிகா

Updated On :21 மே 2026, 6:11 pm IST

நடிகை ஜோதிகா கருப்பு திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு கடந்த சில நாள்களாக தமிழக திரையரங்குகளில் சாமியாடிக்கொண்டிருக்கிறது என்றாலும் மிகையாகாது. விடுமுறை நாள்களுக்கு வந்த கூட்டம் வேலை நாள்களிலும் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் கருப்பு ரூ. 300 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ஜே பாலாஜி இயக்கிய இப்படம் மலையாளம், தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் இந்தாண்டின் அதிகம் வசூலித்த படங்களில் இடம்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கருப்பு குறித்து பேசிய நடிகை ஜோதிகா, ”கருப்பு திரைப்படத்திற்குக் கிடைத்த அன்பைக் கண்டு நாங்கள் நெகிழ்ந்து போயிருக்கிறோம். கடைசி 10 நிமிடங்கள் சூர்யா பிரமாதமாக நடித்திருக்கிறார். இந்த வெற்றியால் வீடே கொண்டாட்டத்தில் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Jyothika has spoken about the film Karuppu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.