முன்பு எப்போதும் இல்லாதவகையில், மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து வருவதாகவும், நல்ல முடிவை மக்கள் எடுப்பார்கள் என்றும் நடிகர் சிலம்பரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வெய்யிலையும் பொருட்படுத்தாது வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் சிலம்பரசன் தியாகராய நகரிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
''இந்த ஆண்டு வித்தியாசமான தேர்தல். அனைவருமே வாக்களிக்க வேண்டும் என நினைக்கின்றனர். அதனால் அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகின்றன.
ஒரு கட்சிக்கு சார்பு எடுத்து என்னால் கருத்து கூற முடியாது. அனைத்துக் கட்சியிலும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்த முறை வாக்களித்தே தீர வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடம் உள்ளது.
மக்கள் தெளிவாக இருக்கின்றனர். அவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள். எந்தத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்தாலும் விமர்சனங்கள் இருக்கும். விமர்சனங்களை சந்தித்துதான் ஆக வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
Summary
TN Election 2026 live update Actor silambarasan cast vote in Tnagar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என் பெயர் எங்கப்பா? கார்த்தியைக் கிண்டலடித்த சூர்யா!
பிரபல நடிகர் திலீப் ராஜ் மாரடைப்பால் மரணம்!
தருணத்துக்காகக் காத்திருந்த வரலாறு: விஜய்க்கு சிலம்பரசன் வாழ்த்து!
சைவத்திற்கு மாறிய சிலம்பரசன்!
விடியோக்கள்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி




