25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

வெங்கட் பிரபு கதை, யுவன் இசை... ராஜாஸ் பிளேலிஸ்ட் முதல் பாடல் ரிலீஸ் தேதி!

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் ராஜாஸ் பிளேலிஸ்ட் படத்தின் முதல் பாடல் குறித்து...

Poster of the movie 'Rajas Playlist'.

ராஜாஸ் பிளேலிஸ்ட் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / எலிஃபேன்டைன்

Published On :29 ஆகஸ்ட் 2026, 7:05 pm IST

வெங்கட் பிரபு கதையில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் ராஜாஸ் பிளேலிஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படத்தின் சமீபத்தில் வெளியாகியது. இப்படத்திற்கு வெங்கட் பிரபு கதை எழுத, யுவன் இசையமைக்கிறார்.

எலிஃபேன்டைன் நிறுவனத்தின் சார்பில் ரமணன் பாலகங்காதரன் இப்படத்தை தயாரிக்க, குடும்பஸ்தன் படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் என் சுப்ரமணியன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்குநராக அறிமுகமாகிறார்.

இயக்குநர் சுதா கொங்கரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராக களமிறங்கும் இப்படத்தின் பாடல்களை இயக்குநர் சுஜித், விக்னேஷ் ஸ்ரீகாந்த் மற்றும் நவயுகன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்தப் படத்தின் முதல் பாடல் வரும் ஆக.31ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ஸ்ரீவட்சன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

இளையராஜா குடும்பத்தின் 3 வாரிசுகளின் பங்களிப்பில் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Summary

Yuvan muiscal Raajas Playlist film first single release date

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.