

தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் ராம் சரண் - உப்சனா தம்பதியினருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
ஓர் ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளதாக சிரஞ்சீவி தனது எக்ஸ் பதிவில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரணும் தொழிலதிபர் உபசனாவும் கடந்த 2012-இல் திருமணம் செய்தார்கள்.
இந்தத் தம்பதியினருக்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது.
இதன்பிறகு கடந்த அக்டோபரில் இரட்டைக் குழந்தகள் பிறக்கவிருப்பதாகக் கூறியிருந்தார்கள்.
இந்நிலையில், ஓர் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் பிறந்துள்ளதாக சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.
ராம்சரண் புகழ்பெற்ற திரைப்பட நடிகர். ஆர்ஆர்ஆர், மகதீரா, ரங்கஸ்தலம் போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்றவர்.
ராம் சரணின் மனைவி உபாசனா ஒரு தொழில் அதிபர், கொடையாளர் மற்றும் சுகாதார சமூக ஆர்வலர், அப்பல்லோ மருத்துவமனைகளின் சிஎஸ்ஆர் பிரிவான அப்பல்லோ அறக்கட்டளையின் துணைத் தலைவராகவும், குடும்ப சுகாதாரத் திட்ட காப்பீட்டு டிபிஏ லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.
இவர் அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பிரதாப் ரெட்டியின் பேத்தியாவார். இந்த மருத்துவமனை குழுமத்தின் மதிப்பு ரூ.77,000 கோடி என மதிப்பிடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.