இலக்கியா தொடரில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை சுஷ்மா நாயர், தான் கருவுற்றிருப்பதை அறிவித்துள்ளார்.
பிறந்தநாளில் கிடைத்த மிகச்சிறந்த பரிசு இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இலக்கியா தொடர் ஒளிபரப்பானது. சாம்பவி குருமூர்த்தி, நந்தா லோகநாதன், காயத்ரி சாஸ்திரி என பலர் நட்சத்திர பட்டாளம் நடித்த இந்தத் தொடர் 985 எபிஸோடுகளுடன் முடிந்தது.
2022 முதல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில் வில்லி பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை சுஷ்மா நாயர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும், பட்ஜெட் குடும்பம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.
சின்ன திரையில் நடித்துவந்தாலும் சுயமாக ஆடைவடிவமைப்புத் தொழிலும் ஈடுபட்டு வரும் இவர், லிஜோ ஜான் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். தற்போது லிஜோ ஜான் - சுஷ்மா நாயர் தம்பதி கருவுற்றிருப்பதை அறிவித்துள்ளனர்.

கணவருடன் நடிகை சுஷ்மா நாயர் - படம் - இன்ஸ்டாகிராம்
பிறந்தநாளில் கிடைத்த மிகச்சிறந்த பரிசு, கருவுற்றிருப்பதை அறிந்துகொண்டது என்று நெகிழ்ச்சியுடன் சுஷ்மா பகிர்ந்துள்ளார். இவருக்கு சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Summary
best birthday present Serial Actress announced her pregnancy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்மிக பயணத்தில் நடிகை சைத்ரா ரெட்டி!

இளம் வயதில் புது வீடு கட்டி குடியேறிய சின்ன திரை நடிகை!

சின்ன மருமகள் தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

யாருக்கு வாக்களித்தனர்? சூசகமாக தெரிவித்த சின்ன திரை ஜோடி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




