

நடிகர் பிரதீப் ரங்கநாதன் திரைப்படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மற்றும் ‘டியூட்’ ஆகிய திரைப்படங்கள் தொடர்ந்து ரு.100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றுள்ளன. இவர் நடித்த எல்ஐகே திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
அடுத்ததாக, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குவதுடன் அதில் நாயகனாகவும் பிரதீப் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரதீப் தயாரிப்பு நிறுவனம் துவங்கவுள்ளதாகவும் இதன் முதல் திரைப்படத்தில் நடிகை மமிதா பைஜு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வணிக ரீதியாக பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல மார்க்கெட் உள்ளதால் தயாரிப்பு நிறுவனம் மூலமும் பெரிதாக கவனத்தைப் பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.