நடிகர் விஜய் நடிப்பில் உருவான “தெறி” திரைப்படத்தின் மறுவெளியீடு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் - இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் “தெறி”. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார்.
2016 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற “தெறி” திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை விடுமுறைகளை முன்னிட்டு மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பொங்கலுக்கு வெளியாகும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க “தெறி” படத்தின் மறுவெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக, தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.
முன்னதாக, நடிகர் விஜய்யின் “ஜன நாயகன்” திரைப்படம் கடந்த ஜன.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
re-release of the film "Theri," starring actor Vijay, has been postponed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

பாடலுடன் தொடங்கும் ரஜினி - 173 படப்பிடிப்பு!
இயக்குநரான விஷால்! மகுடம் டீசர் அறிவிப்பு!

படப்பிடிப்பு நிறைவு! ஜூலை வெளியீடாக ஆர்யா - 40?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



