தான் பாடிய பாடல்களிலேயே பாடுவதற்குக் கடினமாக அமைந்த பாடலை ஜானகி கூறியிருந்தார்.
இந்தியத் திரையிசையில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்த எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது அவரது ரசிகர்களிடம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் ஆயிரக்கணக்கான மிகச்சிறந்த பாடல்களைப் பாடிய குரல் என்பதால் பலரும் ஜானகியின் பாடலைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
70 ஆண்டுகளுக்கு மேல் திரையிசைப் பாடல்கள் மற்றும் ஆன்மிகப் பாடல்களைப் பாடிய ஜானகிக்கு கடினமாக அமைந்த பாடல் ஒன்றுண்டு. அது, 1977 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஹேமாவதி திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘சிவ சிவ என்னட நாளிகே ஈகே..” பாடல்தான். அபோகி மற்றும் தோடி ராகங்களில் இருந்ததால் அதனைப் பாட மிகவும் கடினமாக இருந்ததாக ஜானகியே ஒருமுறை கூறியிருந்தார்.
இறுதியாக, 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பத்து கல்பனகள் (pathu kalpanakal) திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘அம்மபூவினும்’ (ammapoovinum) பாடலைப் பாடியதுடன் ஜானகி ஓய்வுபெற்றது குறிப்பிடத்தக்கது.
This is the song that was difficult for singer Janaki to sing!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







