தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோரை பிரபல ராப் பாடகர் வேடன் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
மலையாளம் மற்றும் தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடகரில் ஒருவராக அறியப்படும் பாடகர் வேடன், சமூக நீதியை மையமாகக் கொண்டு ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்த நிலையில், தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோரை இன்று (ஜூன் 10) தலைமைச் செயலகத்திலுள்ள அவர்களது அலுவலகங்களில் மரியாதை நிமித்தமாக பாடகர் வேடன் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
அமைச்சர் வன்னி அரசு உடனான சந்திப்பில், இலங்கையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகள் குறித்து பாடியதற்காக ராப் பாடகர் சங்கீதன் என்பவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து இருவரும் உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக சமூகநீதித்துறை வெளியிட்டுள்ள பதிவில்,
”ராப் இசை உலகில் தனக்கென தனி அடையாளத்தையும் - இடத்தையும் பெற்றுள்ள ராப் பாடகர் வேடன் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் என்னை சந்தித்தார். சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதற்கு தனது வாழ்த்துகளைக் கூறினார்.
தமிழீழத்தில் ராப் பாடகர் சங்கீதன், தனது பாடலுக்காக இலங்கை அரசால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். தான் அடுத்து திட்டமிட்டுள்ள முன்னெடுப்புகள் குறித்து விவரித்தார். விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அவருக்கு எமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன்” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அரசியல், சமூக நீதி ஆகியவைக் குறித்து தொடர்ந்து தனது பாடல்களை வெளியிட்டு வரும் பாடகர் வேடன் கடந்த மார்ச் மாதம் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரை நேரில் சந்தித்தது பெரும் பேசுபொருளானது.
Summary
Vedan met and interacted with TN Minister for Social Justice Vanni Arasu, and Minister for School Education, Rajmohan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜகவை கண்டு தமிழக அரசு அஞ்சவில்லை: அமைச்சா் வன்னி அரசு

”சாதி பாகுபாடு காட்டினால், அரசுப் பணியில் நீடிக்க முடியாது!” வன்னி அரசு! | VCK

இது தீண்டாமையை ஒழிக்கும் அரசு!: அமைச்சர் வன்னி அரசு! | TVK | VCK

”அவருடைய குரல்தான் எங்கள் குரல்!” முதல்வர் குறித்து அமைச்சர் வன்னி அரசு | VCK | TVK
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP




