அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

காதலரை அறிமுகப்படுத்திய நடிகை பிரிகிடா!

நடிகை பிரிகிடா காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்...

News image

தன் காதலருடன் நடிகை பிரிகிடா

Updated On :30 ஜூன் 2026, 1:50 pm IST

நடிகை பிரிகிடா சாகா தன் காதலரைப் பிறந்த நாளில் அறிமுகம் செய்துள்ளார்.

ஆஹா கல்யாணம் என்கிற இணையத் தொடரில் பவி டீச்சராக நடித்து பிரபலமான நடிகை பிரிகிடா சாகா தொடர்ந்து அயோக்யா, மாஸ்டர் ஆகிய படங்களின் மூலம் வரவேற்பைப் பெற்றார். மேலும், இயக்குநர் பார்த்திபனின் உதவி இயக்குநராக இரவின் நிழல் படத்தில் பணியாற்றியதுடன் நடிக்கவும் செய்தார்.

இறுதியாக, மார்கன், இட்லி கடை ஆகிய படங்களில் நடித்திருந்தார். குணச்சித்திர கதாபாத்திரம், நாயகியின் தோழி ஆகிய ரோல்களில் நடித்தும் வருகிறார்.

இந்த நிலையில், பிரிகிடா சாகா நடிகர் ஆனந்த் என்பவரைக் காதலிப்பதாக அறிவித்துள்ளார். மீசைய முருக்கு, நண்பன் ஒருவன் வந்த பிறகு ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றவர் ஆனந்த். இவரும் பிரிகிடாவும் சில ஆண்டுகளாகக் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது, நடிகர் ஆனந்த்தின் பிறந்த நாளில், “சினிமா எனக்கு கனவுகளைக் கொடுத்தது. வாழ்க்கை உன்னைக் கொடுத்தது. என் என்றைக்குமானவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” எனக் கூறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Actress Brigida Saga has introduced her boyfriend on her birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.