கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இயக்குநர் சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்!

இயக்குநர் சிதம்பரத்துக்கு பிணை கிடைத்துள்ளது...

News image
சிதம்பரம்
Updated On :9 மார்ச் 2026, 8:03 am

இணையதளச் செய்திப் பிரிவு

பாலியல் துன்புறுத்து வழக்கில் இயக்குநர் சிதம்பரம் பிணை பெற்றுள்ளார்.

‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.

தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தற்போது, சிதம்பரம் ’பாலன் தி பாய்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இக்கதை ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியது.

சில நாள்களுக்கு முன் தெற்கு எர்ணாகுளம் காவல் நிலையத்தில் சிதம்பரம் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட பின், சிதம்பரம் மீது பாலியல் ரீதியாக பயன்படுத்தியது, அவமரியாதை செய்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புகாரில் சினிமா துறையில் இருக்கும் அந்த இளம்பெண்ணை கடந்த 2022 ஆம் ஆண்டு சிதம்பரம் பாலியல் ரீதியாகப் தொந்தரவு செய்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 4 ஆண்டுகள் கழித்து இப்போது ஏன் வழக்கு தொடரப்பட்டுள்ளது என சிதம்பரம் தரப்பிலிருந்து கேள்வியெழுப்பி முன் ஜாமீன் கோரியிருந்தனர். தற்போது, எர்ணாகுளம் நீதிமன்றம் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.