பாலியல் துன்புறுத்து வழக்கில் இயக்குநர் சிதம்பரம் பிணை பெற்றுள்ளார்.
‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.
தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது, சிதம்பரம் ’பாலன் தி பாய்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இக்கதை ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியது.
சில நாள்களுக்கு முன் தெற்கு எர்ணாகுளம் காவல் நிலையத்தில் சிதம்பரம் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட பின், சிதம்பரம் மீது பாலியல் ரீதியாக பயன்படுத்தியது, அவமரியாதை செய்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புகாரில் சினிமா துறையில் இருக்கும் அந்த இளம்பெண்ணை கடந்த 2022 ஆம் ஆண்டு சிதம்பரம் பாலியல் ரீதியாகப் தொந்தரவு செய்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 4 ஆண்டுகள் கழித்து இப்போது ஏன் வழக்கு தொடரப்பட்டுள்ளது என சிதம்பரம் தரப்பிலிருந்து கேள்வியெழுப்பி முன் ஜாமீன் கோரியிருந்தனர். தற்போது, எர்ணாகுளம் நீதிமன்றம் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கலவர வழக்கு: காவல்துறையின் மேல்முறையீடு தள்ளுபடி

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கு: பிணை கோரிய இடைத்தரகா் ஜேம்ஸின் மனு தள்ளுபடி

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைதானவரின் பிணை ரத்து

பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


