விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

சித்தாரே ஜமின் பர் ஓராண்டுக்குப் பின் ஓடிடியில் ரிலீஸ்! ஆமிர் கான் விளக்கம்!

நடிகர் ஆமிர் கானின் சித்தாரே ஜமின் பர் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...

Poster for the movie Sitaare Zameen Par.

சித்தாரே ஜமின் பர் படத்தின் போஸ்டர். - படம்: ஆமிர் கான் புரடக்‌ஷன்ஸ்.

Published On :

நடிகர் ஆமிர் கானின் சித்தாரே ஜமின் பர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் சோனி லைவ் ஓடிடியில் வரும் மார்ச் 3ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆமிர் கான் புரடக்‌ஷன் தயாரிப்பில் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்தாண்டு ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

தயாரிப்பாளரான ஆமீர் கான், சித்தாரே ஜமீன் பர் திரைப்படத்தை எந்தவொரு முன்னணி ஓடிடி தளங்களிலும் வெளியிடாமல், யூடியூபில் கட்டணம் வசூலித்து அனைவரும் காணும் வகையில் வெளியிடுவோம் என அறிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேரடியாக யூடியூப்பில் வெளியிடப்பட்டது. இந்தப் படம் திரையரங்கில் ரூ.200 கோடி வசூலித்தது. ஆனால், யூடியூப்பில் போதிய அளவு கவனம் பெறவில்லை எனக் கூறபடுகிறது.

இதுகுறித்து ஆமிர் கான், “எனக்கு இரண்டு மனநிலை கிடையாது. எப்போதுமே ஓடிடியில் வெளியிட விரும்புவேன். ஆனால், திரையரங்குகளில் வெளியான உடனேயே வெளியிட விருப்பமில்லை. அதனால், இப்போது சோனி லைவ் ஓடிடியில் ஏப்.3ஆம் தேதி வெளியாகிறது. திரையரங்கில் பார்க்காதவர்கள் ஓடியில் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்

Summary

Sitaare Zameen Par released in cinema halls across the country in June 2025. The film will now make its streaming debut on SonyLIV on April 3.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.