
என் கல்லூரி காலங்களில் உங்கள் குரல்..! - சாலமன் பாப்பையா மறைவுக்கு சிவகார்த்திகேயன் புகழஞ்சலி!
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவுக்கு சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார்...

தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவுக்கு சிவகார்த்திகேயன் இரங்கல்... - எக்ஸ்
தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மூத்த தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (வயது 90) இன்று (செப். 11) வயது மூப்பின் காரணமாக மதுரையில் காலமானார்.
அவரது மறைவுக்குத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஏராளமான பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“சிறு வயது முதல் உங்கள் குரல் இல்லாத பண்டிகை நாட்கள் இல்லை. என் கல்லூரி காலங்களில் உங்கள் குரல் இல்லாமல் நான் மேடை ஏறியதில்லை.
“அன்பு பெரியோர்களே” என்று உங்கள் குரலில் நான் மேடையில் பேச ஆரம்பிக்கும்போதெல்லாம் ஆர்ப்பரித்த இந்தத் தமிழ் சமூகத்தில், உங்கள் பேச்சாலும் தமிழாலும் நீங்கள் என்றும் எங்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள், ஐயா. உங்களின் பலகோடி ரசிகர்களில் ஒருவனாக எனது புகழஞ்சலி” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் உடலுக்குத் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேரில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
Summary
Actor Sivakarthikeyan has expressed his condolences over the passing of Tamil scholar Solomon Pappaiah.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







