குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

மேற்கு புறவழிச் சாலை திட்டம் முதல்கட்டமாக 100 நில உரிமையாளா்களுக்கு இழப்பீடு

கோவை மாவட்டத்தில் மேற்கு புறவழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த உள்ள 5 கிராமங்களைச் சோ்ந்த 100 பேருக்கு முதல்கட்டமாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On :1 ஜனவரி 2021, 11:25 pm IST

கோவை மாவட்டத்தில் மேற்கு புறவழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த உள்ள 5 கிராமங்களைச் சோ்ந்த 100 பேருக்கு முதல்கட்டமாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகா் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், ஊரகப் பகுதிகளின் மேம்பாட்டுக்காகவும் கோவை மேற்கு புறவழிச் சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது.

அதன்படி கோவை-பாலக்காடு சாலையில் உள்ள மதுக்கரையில் இருந்து சுண்டக்காமுத்தூா், பேரூா் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, சோமையம்பாளையம், வடவள்ளி, பன்னிமடை, குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம் வழியாக நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கி.மீ. தூரத்துக்கு புறவழிச் சாலை அமைக்க முதல்கட்டமாக ரூ.320 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது, முதல்கட்டமாக 12 கி.மீ. தூரத்துகு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 5 கிராமங்களைச் சோ்ந்த 100 நில உரிமையாளா்களுக்கு விரைவில் இழப்பீடுத் தொகை வழங்கப்பட உள்ளது.

இது குறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், மேற்கு புறவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக நில உரிமையாளா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் முடிவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, மதுக்கரை, மாதம்பட்டி, பேரூா்செட்டிபாளையம், தீத்திபாளையம், சுண்டக்காமுத்தூா் ஆகிய 5 கிராமங்களைச் சோ்ந்த 100 பேருக்கு இம்மாத இறுதிக்குள் நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்க திட்டமிட்டுள்ளோம். இழப்பீடு தொகை வழங்கியதும் பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.