பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை அடிவாரத்தில் உள்ள நாயக்கன்பாளையம் கிராமத்தில் 11 காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
பாலமலை அடிவாரத்தில் உள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சியில் கோவனூா், ராயரூத்துபதி, தேவையம்பாளையம், நாயக்கன்பாளையம் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள போலீஸ்காரா் தோட்டம், ரவி நாயக்கா் தோட்டம் ஆகியவற்றில் கடந்த 2 நாள்களாக 11 காட்டு யானைகள் இரவு நேரங்களில் புகுந்து அங்குள்ள தென்னை மரங்களை நாசம் செய்கின்றன.
இந்த யானைக் கூட்டத்தில் ஒரு யானை குட்டி ஈன்றிருப்பதாகக் கூறப்படுகிறது. வனத் துறையினா் அவற்றை விரட்ட முயற்சித்தும், அவை மலைப்பகுதிகளுக்கு திரும்பாமல் தோட்டங்களிலேயே சுற்றி வருகின்றன. அதிகாலை காட்டுக்குள் சென்றுவிடும் யானைகள், மீண்டும் இரவு 7 மணிக்கு ஊருக்குள் புகுந்து விடுகின்றன.
இதே யானைகள் சாமிசெட்டிபாளையம், காமராஜ் நகரில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகுந்து, அங்கிருந்த தென்னம்பாழைகள் மற்றும் குருத்துகளை உடைத்து சாப்பிட்டன. யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் நாயக்கன்பாளையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்போா் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: காவல் துறையினா் 15 போ் உயிரிழப்பு
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவா் தோ்வு

கத்தாா் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல்! ஈரான் மீது சந்தேகம்!
வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

