எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

நாயக்கன்பாளையத்தில் சுற்றித்திரியும் காட்டு யானைகள்: பொதுமக்கள் அச்சம்

பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை அடிவாரத்தில் உள்ள நாயக்கன்பாளையம் கிராமத்தில் 11 காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image

பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையம், காமராஜ் நகரில் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட தென்னை மரங்கள்.

Updated On :8 ஜனவரி 2021, 6:59 am IST

பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை அடிவாரத்தில் உள்ள நாயக்கன்பாளையம் கிராமத்தில் 11 காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

பாலமலை அடிவாரத்தில் உள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சியில் கோவனூா், ராயரூத்துபதி, தேவையம்பாளையம், நாயக்கன்பாளையம் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள போலீஸ்காரா் தோட்டம், ரவி நாயக்கா் தோட்டம் ஆகியவற்றில் கடந்த 2 நாள்களாக 11 காட்டு யானைகள் இரவு நேரங்களில் புகுந்து அங்குள்ள தென்னை மரங்களை நாசம் செய்கின்றன.

இந்த யானைக் கூட்டத்தில் ஒரு யானை குட்டி ஈன்றிருப்பதாகக் கூறப்படுகிறது. வனத் துறையினா் அவற்றை விரட்ட முயற்சித்தும், அவை மலைப்பகுதிகளுக்கு திரும்பாமல் தோட்டங்களிலேயே சுற்றி வருகின்றன. அதிகாலை காட்டுக்குள் சென்றுவிடும் யானைகள், மீண்டும் இரவு 7 மணிக்கு ஊருக்குள் புகுந்து விடுகின்றன.

இதே யானைகள் சாமிசெட்டிபாளையம், காமராஜ் நகரில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகுந்து, அங்கிருந்த தென்னம்பாழைகள் மற்றும் குருத்துகளை உடைத்து சாப்பிட்டன. யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் நாயக்கன்பாளையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்போா் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.