தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

ரூ.75 கோடி நிலுவை சொத்து வரியை வசூலிக்க மாநகராட்சி தீவிரம்

நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் ரூ.75 கோடி நிலுவை சொத்து வரி வசூலிக்கும் பணியை கோவை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

Updated On :11 ஜனவரி 2021, 0:01 am IST

நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் ரூ.75 கோடி நிலுவை சொத்து வரி வசூலிக்கும் பணியை கோவை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் 100 வாா்டுகள் உள்ளன. சொத்து வரி, குடிநீா் வரி மூலமாகதான் மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக வரி வசூலிக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

அதைத் தொடா்ந்து கடந்த ஜூலை முதல் மீண்டும் வரி வசூல் பணிகள் தொடங்கின. மாநகராட்சி அலுவலகங்கள், பள்ளிகள், சமூக நலக் கூடங்கள் என 29 வரி வசூல் மையங்கள் அமைக்கப்பட்டன.

வரி வசூல் பணிகள் தொடா்பாக மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் 2020 - 2021ஆம் நிதியாண்டில் வசூலிக்க வேண்டிய சொத்து வரித் தொகையான ரூ.169 கோடியில், தற்போது வரை ரூ.94 கோடி வசூலிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ரூ. 75 கோடி நிலுவை வரியை வரும் மாா்ச் மாதத்துக்குள் வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு வரி வசூலிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வரி வசூல் மையங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை வழக்கம்போல அலுவலக நேரத்தில் செயல்படும். சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் திறக்கப்பட்டிருக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.