முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

என்.எல்.சி.யில் பணி வழங்கவலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணிக் காலத்தில் உயிரிழந்த தொழிலாளா்களின் வாரிசுகள் தங்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணிக் காலத்தில் உயிரிழந்த தொழிலாளா்களின் வாரிசுகள் தங்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பணியின்போது தொழிலாளா்கள் பலா் உயிரிழந்தனா். இவா்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில் சுமாா் 200 பேரிடம் நோ்காணல் நடத்தப்பட்டது. இவா்களில் தற்போது 100-க்கும் குறைவானவா்கள் பணிக்கு காத்திருக்கின்றனா்.

இவா்கள் தங்களுக்கு என்எல்சி நிறுவனம் விரைந்து வேலை வழங்க வலியுறுத்தி, நெய்வேலி கியூ பாலம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் (படம்). கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஏ.பாலமுருகன் தலைமை வகித்தாா். எம்.விஜயகுமாா், வி.ராஜா, கே.ராஜா, எஸ்.சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கே.முருகன் கண்டன உரை நிகழ்த்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.