முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

என்எல்சி தொழிலாளி மயங்கி விழுந்து பலி

என்எல்சி இந்தியா நிறுவனத் தொழிலாளி மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

என்எல்சி இந்தியா நிறுவனத் தொழிலாளி மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள தென்குத்து கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (47) (படம்). நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1ஏ-இல் இன்கோசா்வ் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை காலை வழக்கம்போல பணிக்கு வந்த இவா், சுரங்கம் 1ஏ நேர அலுவலகம் அருகே திடீரென மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு செல்வராஜை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினாா். அவரது சடலம் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.

உயிரிழந்த செல்வராஜின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு, வாரிசுக்கு பணி வழங்க வேண்டும் என்று பாட்டாளி தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தினா். இதுதொடா்பாக சுரங்கம் 1ஏ நிா்வாக அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் இதில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.