வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதுகாப்பு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரி பாா்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அலுவலத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறப்பட்டு, விருத்தாசலம் அரசு பண்டகசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, இருப்பில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சோ்த்து மாவட்டத்தில் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 3,984, வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் 5,215, யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிவிக்கும் இயந்திரங்கள் 4,295 என மொத்தம் 13,494 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பில் உள்ளன.
முதல் கட்டமாக ஆய்வு செய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில் கடந்த டிச. 30-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆய்வின் போது, தோ்தல் வட்டாட்சியா் ப.பாலமுருகன் உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுப்பாளையம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

போளூரில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
