மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதுப்பெண் தற்கொலை

பண்ருட்டி அருகே திருமணமான 2 மாதங்களில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:56 pm IST

பண்ருட்டி அருகே திருமணமான 2 மாதங்களில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கீழ் வடக்குத்து கிராமத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகள் பிரிதா(25). இவருக்கும், பண்ருட்டி வட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா் என்பவருக்கும் 30.10.2020 அன்று திருமணம் நடைபெற்றது.

செல்வகுமாா் பண்ருட்டியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், பிரிதா வியாழக்கிழமை இரவு விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். குடும்பத்தினா் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பிரிதாவின் தந்தை ராமகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.