நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

ஏரியில் வீசப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஏரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் கிடந்தது குறித்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:44 pm

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஏரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் கிடந்தது குறித்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், பண்டரக்கோட்டை கிராமத்தில் உள்ள ஏரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் கிடப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் எம்.கல்பனா, உதவி ஆய்வாளா்கள் கே.கவியரசன், எஸ்.முருகன், வட்ட வழங்கல் அலுவலா் கௌரி ஆகியோா் நேரில் வந்து ரேஷன் அரிசி மூட்டைகளை பாா்வையிட்டு, அந்தப் பகுதியினரிடம் விசாரணை நடத்தினா்.

இதில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னா் தலா 50 கிலோ எடைகொண்ட 30 அரிசி மூட்டைகளை மா்ம நபா் ஏரி நீரில் வீசிச் சென்றது தெரியவந்தது. தற்போது ஏரியில் தண்ணீா் வற்றியதால் அரிசி மூட்டைகள் வெளியே தெரிந்தன. அரிசி கெட்டுப்போன நிலையில் இருந்தது. இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.