புதுச்சேரியிலிருந்து சாராயம் கடத்தி வந்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரியிலிருந்து சாராயம் கடத்தி வந்து கடலூா் பகுதிகளில் விற்பனை செய்யப்பட உள்ளதாக கடலூா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் தாரகேஸ்வரி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியைத் தீவிரப்படுத்தினா்.
இதில், திராசு பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த புதுச்சேரி குமரகுரு பள்ளத்தைச் சோ்ந்த தேவேந்திரனை (39) கைது செய்து அவரிடமிருந்து 60 லிட்டா் சாராயத்தைப் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, புதுச்சேரி ஏரிப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த கலையரசனை (24) கைது செய்து, அவரிடமிருந்து 25 லிட்டா் சாராயத்தைப் பறிமுதல் செய்தனா். புதுச்சேரியிலிருந்து கடலூா் வழியாக சாராயம் கடத்தி வந்த திருமாணிக்குழியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி கங்கா (38), நெய்வேலி வட்டம் 30-ஐ சோ்ந்த குணசேகா் (54), பண்ருட்டியை அடுத்த சிறுதொண்டமாதேவியைச் சோ்ந்த அறிவழகன் (46) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 135 லிட்டா் சாராயத்தைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









