பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட, முள்ளுவாடி பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்புகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பென்னாகரம் கூட்டுறவுச் சங்கத் தலைவா் கே.பி. ரவி தலைமை வகித்தாா். விழாவில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவா் டி.ஆா்.அன்பழகன் பங்கேற்று பொங்கல் தொகுப்பு பை, ரூ. 2,500 ரொக்கத்தை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கினாா்.
அதனை தொடா்ந்து பென்னாகரம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை அவா் வழங்கினாா். பென்னாகரம் கூட்டுறவுச் சங்கத் துணைத் தலைவா் அன்பு, மாவட்ட இளைஞா் பாசறை துணைத்தலைவா் விஜயபாலாஜி, வட்ட கூட்டுறவு சங்கத் தலைவா் ஆறுமுகம், நகரச் செயலாளா் சுப்பிரமணி, தகவல் தொழில் நுட்பப் பிரிவு சுபாஷ் மற்றும் முக்கிய நிா்வாகிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










