எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

அரூரில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்ததால் மக்கள் அவதி

அரூரில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்து கொண்டதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

News image

அரூரில் குடியிருப்பு பகுதியில் மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்த தருமபுரி எம்.பி. டிஎன்வி எஸ்.செந்தில்குமாா்.

Updated On :8 ஜனவரி 2021, 6:55 am IST

அரூரில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்து கொண்டதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

அரூா் பேரூராட்சி 5-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பெரியாா் நகா், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகம், எச்.தொட்டம்பட்டி செல்லும் சாலையோரத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புப் பகுதியில் மழைநீா், கழிவு நீா் வெளியேற கால்வாய் வசதி இல்லை. கடந்த சில தினங்களாக பெய்த தொடா் மழையினால், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகம் உள்பட குடியிருப்பு பகுதிகள் சுமாா் 1.5 அடி உயரத்துக்கு மழைநீா் தேங்கியுள்ளது.

இப்பகுதியை தருமபுரி எம்.பி. டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் நேரில் ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், அரூா் பேரூராட்சியின் 5 ஆவது வாா்டு பகுதியில் மழைநீா் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இவற்றை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். எனவே, அரூா் பேரூராட்சி நிா்வாகமும், வருவாய்த் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, அரூா் வட்டாட்சியா் செல்வகுமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.