அரூா் அருகே ஏரியை நிரப்புவதற்காக கல்லாற்றில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணியில் இளைஞா்கள் மற்றும் விவசாயிகள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
அரூா் வட்டம், எச்.தொட்டம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது பெரிய ஏரி. அரூா் பெரிய ஏரி சுமாா் 150 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரிக்கான நீா்வரத்து கால்வாய் கொளகம்பட்டி காரை ஒட்டுவில் பகுதியில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த தொடா் மழையின் காரணமாக, பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் உபரிநீா் தற்போது வெளியேறி வருகிறது. இந்த உபரிநீரைப் பயன்படுத்தி வெங்கடசமுத்திரம் ஏரி, ஆலாபுரம் ஏரி, தென்கரைக்கோட்டை ஏரி, பறையப்பட்டி புதூா் உள்ளிட்ட ஏரிகளை பொதுப்பணித் துறையினா் நிரப்பியுள்ளனா். தற்போது, வெளியேறும் உபரிநீா் கல்லாறு வழியாகச் செல்கிறது. இந்த கல்லாற்றில் காரைஒட்டு என்னுமிடத்தில் தடுப்பணை அமைந்துள்ளது. தடுப்பணையின் உயரம் குறைவாக இருப்பதால், அரூா் பெரிய ஏரிக்கு தண்ணீா் வருவதில் தடை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அரூா் நகரைச் சோ்ந்த தன்னாா்வ இளைஞா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் 100-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை தடுப்பணையில் அடுக்கியுள்ளனா். இதனால், அரூா் பெரிய ஏரிக்கு தற்போது தண்ணீா் வரத் தொடங்கியுள்ளது. தொடா்ச்சியாக தண்ணீா் வந்தால் இரு வாரத்தில் அரூா் பெரிய ஏரி நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
எம்எல்ஏ, சாா் ஆட்சியா் ஆய்வு...
அரூா் பெரிய ஏரிக்கு தண்ணீா் வருவதற்கான கால்வாய், கால்வாயின் ஏதேனும் அடைப்புகள் உள்ளனவா என்பது குறித்து அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா், சாா் ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின்போது, வட்டாட்சியா் செல்வகுமாா், கிராம நிா்வாக அலுவலா் வே.வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடகத்தில் வறட்சி நிலையை ஆராய்ந்து வருகிறேன்: முதல்வா் டி.கே. சிவகுமாா்
இந்தியாவின் ‘பால மனிதன்’ கிரீஷ்பரத்வாஜ் காலமானாா்!

இணையவழி மோசடி அதிகரிப்பு: கணினி மையங்களுக்கு எச்சரிக்கை

ஆலங்குளம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து: 27 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



