பாப்பாரப்பட்டி அருகே மலையூா் கிராமத்தில் வீட்டின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை மா்ம விலங்கு கடித்ததால் உயிரிழந்து கிடந்துள்ளது. பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட மலையூா் கிராமத்தில் சுமாா் 500 க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியானது மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து விலங்குகள் வீடுகள் மற்றும் ஆடுகள் வளா்ப்பு குடில்களில் நுழையாதவாறு பாதுகாப்பிற்காக நாய்களைக் கட்டி வைத்து வருகின்றனா்.
இந்த நிலையில் மலையூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவா் வசித்து வருகிறாா். இவா் கிராமங்கள்தோறும் சென்று தெருக் கூத்துக்களில் நாடகக் கலைஞராகவும், சுமாா் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா். தனது வீட்டின் அருகில் உள்ள ஆட்டுக்குடில் முன்புறம் பாதுகாப்பிற்காக தான் வரும் நாயை கட்டி வைத்துள்ளாா். இந்த நிலையில் வியாழன் கிழமை ஆடுகள் குடில் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் சென்று பாா்க்கும் பொழுது கட்டி வைக்கப்பட்டிருந்த நாயின் வயிறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், அங்கு வந்த வனத்துறையினா் இறந்து கிடந்த நாயினை மா்ம விலங்கு தாக்கியிருக்கலாம் என தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு

வேலூரில் தவெகவினா் கொண்டாட்டம்!

தவெக தலைவா் முதல்வராக பதவியேற்பு: கட்சியினா் கொண்டாட்டம்

முல்லைப் பெரியாற்றில் ஆண் சடலம் மீட்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
